ஆன்மிகம்

சுயம்புவாக பண்ணாரி அம்மன்

Published On 2018-09-27 10:06 GMT   |   Update On 2018-09-27 10:06 GMT
பண்ணாரியில் புகழ் பெற்ற பண்ணாரி மாரியம்மன் ஆலயத்தில் மாரியம்மன் தாமரை மீது சாந்த சொரூபினியாக இருக்கிறாள். அன்னையின் திருவுருவம் சுயம்புவாகும்.
பண்ணாரியில் புகழ் பெற்ற பண்ணாரி மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாரியம்மன் தாமரை மீது சாந்த சொரூபினியாக இருக்கிறாள். அன்னையின் திருவுருவம் சுயம்புவாகும். முக்கிய உற்சவ நாளில் அன்னை சரஸ்வதி அலங்காரத்துடன் காட்சி தருகிறாள். இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

இரவு தீமிதி விழா நடைபெறும். பூசாரி முதலில் செல்ல, தொடர்ந்து பக்தர்கள் செல்ல அவர்களை அடுத்து கால்நடைகளும் தீமிதிக்க இறங்குமாம். குண்டத்தில் புதியதாக விளைந்த தானியங்கள், சுரைத்தேங்காய், புகையிலை முதலியன சமர்ப்பிக்கப்படும். மலைவாழ் மக்களான படுகர் இனத்தவரின் குலதெய்வம் பண்ணாரி மாரியம்மன். எனவே அவர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் முதலியவற்றை கோவிலில் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.

திருமணமாகாதவர்கள் மாரியம்மன் அருளால் திருமணம் கூட, மகிழ்ச்சியடைவார்கள். அந்த மங்கள இசையில் அம்மனும் மகிழ்ச்சி அடைவாள்.
Tags:    

Similar News