ஆன்மிகம்

மார்க்கண்டேஸ்வரர் கோவிலில் 1 லட்சத்து 8 தீபம் ஏற்றும் விழா

Published On 2018-10-03 06:13 GMT   |   Update On 2018-10-03 06:13 GMT
மார்க்கண்டேஸ்வரர் கோவிலில் ஒரு லட்சத்து 8 தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் அம்மையாண்டி கிராமத்தில் மார்க்கண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மார்க்கண்டேஸ்வரர் அபிராமி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி 1 லட்சத்து 8 தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது.

விழாவையொட்டி மார்க்கண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. விழாவில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி, சாமி தரிசனம் செய்தனர்.

தீபம் ஏற்றுவதற்கான அகல் விளக்கு, திரி, எண்ணெய் ஆகியவை கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
Tags:    

Similar News