ஆன்மிகம்

மைசூரு சாமுண்டிமலை நந்திக்கு மகா ருத்ராபிஷேகம் 12-ந்தேதி நடக்கிறது

Published On 2018-11-07 03:53 GMT   |   Update On 2018-11-07 03:53 GMT
மைசூருவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் சாமுண்டி மலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் மகா நந்தி உள்ளது. இந்த நந்திக்கு 12-ந்தேதி மகா ருத்ராபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
மைசூருவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் சாமுண்டி மலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் மகா நந்தி உள்ளது. 16 அடி உயரம் கொண்ட இந்த மகா நந்திக்கு மகா ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் நடப்பு ஆண்டில் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) நந்திக்கு மகா ருத்ராபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

இந்த ருத்ராபிஷேகத்தின் போது 500 லிட்டர் பால், 200 லிட்டர் தயிர், 100 லிட்டர் தேன், திவ்ய, திரவிய பொருட்கள் என 47 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் சிறப்பு அலங்காரம், பூஜையும் நடத்தப்படுகிறது.

இந்த தகவலை நந்தி மகா ருத்ராபிஷேக குழு தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News