ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு நேற்று அதிகாலை 5 மணியிலிருந்து ஏராளமான பக்தர்கள் நெய்தீபங்கள் ஏற்றியும், கோவிலின் நுழைவு வாயிலில் தீபம் ஏற்றி தேங்காய் உடைத்தும் வணங்கினர்.
சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அமாவாசையையொட்டி இக்கோவிலுக்கு நேற்று அதிகாலை 5 மணியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். பக்தர்கள் நெய்தீபங்கள் ஏற்றியும், கோவிலின் நுழைவு வாயிலில் தீபம் ஏற்றி தேங்காய் உடைத்தும் வணங்கினர்.
சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தியும் வந்து அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.
இதே போல் இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், ஆகிய கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.
சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தியும் வந்து அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.
இதே போல் இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், ஆகிய கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.