ஆன்மிகம்
தேரோட்டத்திற்காக தயாராகி வரும் தேர்களை படத்தில் காணலாம்.

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது

Published On 2018-12-21 05:03 GMT   |   Update On 2018-12-21 05:03 GMT
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ளலாம்.
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 14-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு மேல் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருள்வார்கள். பின்னர் பக்தர்கள் தேர்களின் வடத்தை பிடித்து இப்பார்கள்.

இதற்காக 5 தேர்களும் கிழக்கு வீதியில் வரிசையாக நிறுத்தப்பட்டு, அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடக்கிறது.

பின்னர் காலை 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சியும், 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. 24-ந் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News