ஆன்மிகம்

கம்சனை கொன்ற கிருஷ்ணன்

Published On 2019-01-03 08:07 GMT   |   Update On 2019-01-03 08:07 GMT
மல்யுத்தம் ஒன்றை நடத்தி, அதில் கிருஷ்ணனை பங்கேற்கச் செய்து கொல்ல நினைத்தான் கம்சன். ஆனால் அந்த மல்யுத்தத்தின் வாயிலாக கம்சனையும், அவனது சகோதரர்களையும் கிருஷ்ணனும், பலராமனும் கொன்றனர்.
மதுராவை தலைநகராக கொண்ட விருசினி ராஜ்ஜியத்தின் மன்னன் உக்கிரசேனர். இவருக்கும் பத்மாவதிக்கும் பிறந்தவன் கம்சன் என்ற கொடுங்கோலன். இவன் தனது தந்தையை சிறையில் அடைத்து விட்டு ஆட்சியை கைப்பற்றியவன்.

கம்சனின் தங்கை தேவகி. இவளுக்கு பிறக்கப்போகும் 8-வது குழந்தையால் கம்சனுக்கு ஆபத்து என்று சொல்லப்பட்டது. இதனால் தங்கையையும், அவளது கணவனையும் சிறையில் அடைத்தான். அவர்களுக்குப் பிறந்த 6 குழந்தை களைக் கொன்றான்.

அடுத்து பிறந்த இரண்டு குழந்தைகளை கம்சனால் கொல்ல முடியவில்லை. அவர்கள் கோகுலத்தில் யசோதாவிடம் வளர்ந்தனர். குழந்தையாக இருந்த கிருஷ்ணனைக் கொல்ல கம்சன் பல அரக்கர்களை அனுப்பினான். ஆனால் கிருஷ்ணனை எதுவும் செய்ய முடியவில்லை.

முடிவில் மல்யுத்தம் ஒன்றை நடத்தி, அதில் கிருஷ்ணனை பங்கேற்கச் செய்து கொல்ல நினைத்தான் கம்சன். ஆனால் அந்த மல்யுத்தத்தின் வாயிலாக கம்சனையும், அவனது சகோதரர்களையும் கிருஷ்ணனும், பலராமனும் கொன்றனர்.
Tags:    

Similar News