ஆன்மிகம்

பழனி முருகன் கோவிலில் வருடாபிஷேக விழா

Published On 2019-04-10 04:46 GMT   |   Update On 2019-04-10 04:46 GMT
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் மலைக்கோவிலில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பங்குனி மாதம் 26-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன்படி நேற்று வருடாபிஷேக விழா நடந்தது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் மலைக்கோவிலில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பங்குனி மாதம் 26-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி ஆண்டுதோறும், அதேநாளில் வருடாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று வருடாபிஷேக விழா நடந்தது. இதனையடுத்து காலை 10.30 மணி அளவில் மலைக்கோவில் பாரவேல் மண்டபத்தில் தங்கசப்பரத்தில் 9 கலசங்கள் வைத்து சுப்ரமணியர் கலச பூஜை நடைபெற்றது.

முன்னதாக விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், ஸ்கந்த ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் கலசங்கள், உட்பிரகாரம் வலம் வந்து உச்சி காலபூஜையில் மூலவருக்கு கலச அபிஷேகமும், 16 வகை அபிஷேகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது . இதேபோல் பழனி முருகன் கோவிலின் உபகோவில்களான மகிசாசூரவர்த்தினி அம்மன் கோவில், வனத்துர்க்கையம்மன் கோவில், பாதவிநாயகர் கோவில், கோசலவிநாயகர் கோவில், உத்திரவிநாயகர் கோவில், அபரஞ்சி விநாயகர் கோவில்களிலும் வருடாபிஷேக விழா நடந்தது. வருடாபிஷேக விழா பூஜைகளை பட்டத்துகுருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணிய குருக்கள் மற்றும் கோவில் குருக்கள்கள் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News