ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு, பந்தல்கால் நடும் விழா நடந்தபோது எடுத்த படம்.

நெல்லையப்பர் கோவிலில் பந்தல்கால் நடும் விழா

Published On 2019-05-31 03:31 GMT   |   Update On 2019-05-31 03:31 GMT
ஆனித் திருவிழாவை முன்னிட்டு, நெல்லையப்பர் கோவிலில் பந்தல்கால் நடும் விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு ஆனித்திருவிழா வருகிற ஜூலை மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை மாதம் 14-ந்தேதி நடக்கிறது. ஆனித் திருவிழாவை முன்னிட்டு, கோவிலில் பந்தல்கால் நடும் விழா நேற்று நடந்தது.

இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் நெல்லையப்பர் கோவில் சன்னதியில் கொடிமரம் அருகே பந்தல்கால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் அதற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோவில் வெளியே பந்தல்கால் நடப்பட்டது. விழாவில் கோவில் செயல் அலுவலர் ரோஷிணி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லையப்பர் கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் எழுந்தருளும் வகையில் 5 தேர்கள் உள்ளன. இந்த தேர்கள் நெல்லையப்பர் கோவிலைச் சுற்றி நிறுத்தப்பட்டு உள்ளன.

நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் தேர்கள், கண்ணாடி பேழையால் மூடி வைக்கப்பட்டு உள்ளது.

ஆனித் திருவிழாவை முன்னிட்டு, கண்ணாடி பேழைகளை அகற்றி, தேர்களை சீரமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறும்.
Tags:    

Similar News