ஆன்மிகம்
பாளையத்து பவானி அம்மன்

பாளையத்து பவானி அம்மன்

Published On 2020-02-14 04:52 GMT   |   Update On 2020-02-14 04:52 GMT
சக்தியாக பெரிய பாளையத்தில் எழுந்தருளி, தன்னை நாடி வருபவர்களின் குறையை நீக்கி அருள்கிறாள், பவானி அன்னை. பெரியபாளையத்து பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக கருதுகின்றனர்.
பெரியபாளையத்து பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக கருதுகின்றனர். மாபெரும் சக்தியாக பெரிய பாளையத்தில் எழுந்தருளி, தன்னை நாடி வருபவர்களின் குறையை நீக்கி அருள்கிறாள், இந்த பவானி அன்னை.

இந்த ஆலயத்தில் நோயும், பாவமும் நீங்க பக்தர்கள் வேப்பிலையை ஆடையாக அணிந்து ஆலயத்தை சுற்றி வருகின்றனர். பவானி அன்னை தனது வலது மேற்கரத்தில் சக்கரமும், இடதுகரத்தில் சங்கும் ஏந்தி இருக்கிறார். மற்ற இரு கரங்களில் வாளும், அமுதகலசமும் ஏந்தி அருள்பாலிக்கிறார்.

Similar News