வழிபாடு
பழனி முருகன் கோவிலில் 3 நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்
- கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் 16 ஆண்டுகள் பிறகு பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தைப்பூசத் திருவிழா முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருந்தது.
கடந்த 3 நாட்களில் (3,4,5 ஆகிய தேதிகளில்) பழனி கோவிலில் 3 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.