வழிபாடு
கூடலழகர் பெருமாள் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது
- இது வைணவ திவ்ய தேச தலங்களில் 47-வது தலமாக திகழ்கிறது.
- 5-ந் தேதி தசாவதாரம் நிகழ்ச்சி மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் நடக்கிறது.
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது கூடலழகர் பெருமாள் கோவில். இது வைணவ திவ்ய தேச தலங்களில் 47-வது தலமாக திகழ்கிறது. இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது.
விழாவையொட்டி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
இதற்காக கூடலழகர் பெருமாள் கோவில் எதிரே பாண்டிய வேளாளர் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரை அலங்கரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் திருவிழாவில் 5-ந் தேதி தசாவதாரம் நிகழ்ச்சி மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.