வழிபாடு

சந்திரகிரகணத்தை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் கோவிலில் பூஜைநேரம் மாற்றம்

Published On 2022-11-08 02:56 GMT   |   Update On 2022-11-08 02:56 GMT
  • சந்திர கிரகணத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளது.
  • மதியம் 1.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

திருச்செந்தூர் :

சந்திர கிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை ஏற்படுகிறது. இதனால் பல்வேறு கோவில்களில் பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் மதியம் 1.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

அப்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது.

Tags:    

Similar News