வழிபாடு

நாகஅங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா

Published On 2022-07-19 05:03 GMT   |   Update On 2022-07-19 05:03 GMT
  • வருகிற 27-ந் தேதிவரை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.
  • 29-ந்தேதி திருக்கல்யாணம், 30-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

திண்டிவனம் அருகே தென்பசியார் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு நாகஅங்காளம்மன் கோவிலில் வருடந்தோறும் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 9-ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் உள்ள 108 விநாயகருக்கு சிறப்பு யாகத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாகஅங்காளம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த 108 கலசங்களுக்கு நாகராஜ் அய்யர் குழுவினர் சிறப்பு யாகம் நடத்தி தீபாராதனை செய்தனர்.

பின்னர் கலசங்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று 108 விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சக்தி மாலை அணிவித்தல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து வருகிற 27-ந் தேதிவரை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.

மேலும் 28-ந் தேதி காலை 10 மணிக்கு கன்னிமார் கோவிலுக்கு கரகம் புறப்பாடு, பால்குடங்களுடன் கிரக வீதியுலா, அம்மனுக்கு கூழ் வார்த்தல், ஊரணி பொங்கல், அலகு குத்துதல், மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெறுகிறது. 29-ந்தேதி திருக்கல்யாணம், 30-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சக்தி உபாசகர் ராம்குமார், அருள்வாக்கு சித்தர் அசோக்ராஜ் அடிகளார், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News