null
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- மதுரை சொக்கநாதர் தருமிக்கு பொற்கிழி அருளிய காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆவணி-5 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி இரவு 11.26 மணி வரை
பிறகு சப்தமி
நட்சத்திரம்: சுவாதி விடியற்காலை 5.23 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை
மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சஷ்டி விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை சொக்கநாதர் தருமிக்கு பொற்கிழி அருளிய காட்சி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. விருதுநகர் சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-முயற்சி
மிதுனம்-சாந்தம்
கடகம்-களிப்பு
சிம்மம்-பெருமை
கன்னி-வெற்றி
துலாம்- பிரீதி
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- கீர்த்தி
மகரம்-வரவு
கும்பம்-வாழ்வு
மீனம்-ஆர்வம்