ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆவணி-23 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி இரவு 10.48 மணி வரை பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: திருவாதிரை மாலை 6.38 மணி வரை பிறகு புனர்பூசம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர், திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள், ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. தேரழுந்தூர், திண்டுக்கல், உப்பூர், தேவக்கோட்டை, மிலட்டூர் தலங்களில் விநாயகப்பெருமான் உற்சவம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் உற்சவம் ஆரம்பம். மூஷிகசண்டிகேசுவரர் ரிஷப வாகனத்தில் பவனி. பெருவயல் முருகப்பெருமான் திருவீதி உலா. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-களிப்பு
ரிஷபம்-சாந்தம்
மிதுனம்-மாற்றம்
கடகம்-பிரீதி
சிம்மம்-இன்பம்
கன்னி-ஓய்வு
துலாம்- போட்டி
விருச்சிகம்-செலவு
தனுசு- உறுதி
மகரம்-சுபம்
கும்பம்-பெருமை
மீனம்-வெற்றி