வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2023-09-14 02:30 GMT   |   Update On 2023-09-14 02:30 GMT
  • ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை .
  • உப்பூர் விநாயகப் பெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, ஆவணி-28 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: அமாவாசை (முழுவதும்)

நட்சத்திரம்: பூரம் (முழுவதும்)

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை செய்ய நன்று. தேவக்கோட்டை, திண்டுக்கல், மிலட்டூர் கோவில்களில் விநாயகப் பெருமான் பவனி. உப்பூர் விநாயகப் பெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் புல்லின்வாய் கிண்டல், பரமபதநாதனாய் காட்சி. திருச்செந்தூர் முருகப் பெருமான் கேடய சப்பரத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உற்சாகம்

ரிஷபம்-போட்டி

மிதுனம்-சாதனை

கடகம்-லாபம்

சிம்மம்-சாந்தம்

கன்னி-நன்மை

துலாம்- நட்பு

விருச்சிகம்-பண்பு

தனுசு- களிப்பு

மகரம்-கவனம்

கும்பம்-கடமை

மீனம்-உதவி

Tags:    

Similar News