ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆவணி-31 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை காலை 10.47 மணி வரை
பிறகு திருதியை
நட்சத்திரம்: அஸ்தம் காலை 10.33 மணி வரை
பிறகு சித்திரை
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுப முகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வேங்கடேச பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் கோவில்களில் உற்சவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் உற்சவம் ஆரம்பம், பெரிய சேஷ வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ணன் மச்சாவதாரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. உப்பூர் விநாயகப் பெருமான் ரதோற்சவம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-ஓய்வு
மிதுனம்-வெற்றி
கடகம்-அசதி
சிம்மம்-இன்பம்
கன்னி-விருத்தி
துலாம்- யோசனை
விருச்சிகம்-நன்மை
தனுசு- யோகம்
மகரம்-உதவி
கும்பம்-இன்பம்
மீனம்-நட்பு