வழிபாடு

வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி நிறைவு

Published On 2023-01-09 07:22 GMT   |   Update On 2023-01-09 07:22 GMT
  • 2-ந்தேதியிலிருந்து 11-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் நடக்கிறது.
  • பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை பெற்று சாமி தரிசனம் செய்யலாம்.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி நிறைவு பெற்றது.

அதேபோல் திருப்பதியில் சீனிவாசம், அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் ஆகிய 3 இடங்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் 12-ந்தேதி முதல் வழக்கம்போல் வினியோகம் செய்யப்படும். பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை பெற்று சாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News