வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதம் நடக்கும் விழாக்கள்

Published On 2023-03-02 08:46 GMT   |   Update On 2023-03-02 08:46 GMT
  • 3-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை வருடாந்திர தெப்போற்சவம் நடக்கிறது.
  • 22-ந்தேதி உகாதி பண்டிகை நடக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மார்ச்) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

மார்ச் மாதம் 3-ந்தேதி குலசேகர ஆழ்வார் வருட திருநட்சத்திரம், 3-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை 5 நாட்கள் வருடாந்திர தெப்போற்சவம், 7-ந்தேதி குமாரதாரா தீர்த்த முக்கோட்டி உற்சவம், 18-ந்தேதி தாலப்பாக்கம் அன்னமாச்சார்யா நினைவுநாள், 22-ந்தேதி உகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு), உகாதி ஆஸ்தானம், 30-ந்தேதி ராம நவமி ஆஸ்தானம், 31-ந்தேதி ராமர் பட்டாபிஷேக ஆஸ்தானம்.

மேற்கண்டவை நடக்கின்றன.

Tags:    

Similar News