வழிபாடு
திருமலையில் மலையப்ப சாமி தெப்போற்சவம்
- தெப்பத்தில் மூன்று சுற்றுகள் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- வேதம், பாட்டு, இசை ஆகியவற்றுக்கு இடையே தெப்போற்சவம் நடைபெற்றது.
திருமலையில் நேற்று மலையப்ப சாமி தெப்போற்சவம் நடைபெற்றது. இதற்காக தெப்பம் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக மாலை 6 மணிக்கு பூதேவி சமேதா மலையப்ப சாமி ஊர்வலம் தொடங்கியது. கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக சென்று புஷ்கரிணியை அடைந்தது.
அங்கு பூதேவி சமேதா மலையப்ப சாமி புஷ்கரணியில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் மூன்று சுற்றுகள் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வேதம், பாட்டு, இசை ஆகியவற்றுக்கு இடையே தெப்போற்சவம் நடைபெற்றது.