இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 3 செப்டம்பர் 2024
- சோளசிம்மபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் புறப்பாடு.
- திருச்செந்தூர் முருகப் பெருமான் கேடயச் சப்பரத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-18 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: அமாவாசை காலை 7.59 மணி வரை. பிறகு பிரதமை.
நட்சத்திரம்: பூரம் மறுநாள் விடியற்காலை 4.13 மணி வரை. பிறகு உத்திரம்.
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சோளசிம்மபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் புறப்பாடு. திருச்செந்தூர் முருகப் பெருமான் கேடயச் சப்பரத்தில் பவனி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் அருளுதல், மாலை கஜமுக சூரசம்ஹாரலீலை. உப்பூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்சொல்
ரிஷபம்-அமைதி
மிதுனம்-பணிவு
கடகம்-பரிசு
சிம்மம்-துணிவு
கன்னி-பயணம்
துலாம்- தேர்ச்சி
விருச்சிகம்-பெருமை
தனுசு- விருத்தி
மகரம்-ஆக்கம்
கும்பம்-மாற்றம்
மீனம்-உவகை