வழிபாடு

விநாயகருக்கு முதன்முதலில் மோதகம் படைத்தது யார் தெரியுமா?

Published On 2024-09-06 04:27 GMT   |   Update On 2024-09-06 04:27 GMT
  • சர்வ ரட்சகரான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார்.
  • ஒவ்வொரு படைப்பும் பூரணத்தை போல இனிமையானதாக கருதி, நாம் இனிய செயல்களை செய்ய வேண்டும்.

பிள்ளையாருக்கு முதன்முதலில் மோதகம் படைத்தது, வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி என்று கூறப்படுகிறது.

சர்வ ரட்சகரான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார். அருந்ததி அண்டத்தை உணர்த்த, மாவினால் 'செப்பு' என்ற மேல் பகுதியைச் செய்தாள். அண்டத்தின் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் பிள்ளையாரைக் குறிக்கும் வகையில் இனிப்பான பூரணத்தை, மாவுக்குள் வைத்தாள். அதுவே, மோதகம் என்னும் கொழுக்கட்டை.

இது தவிர உலகமே மோதகமாகவும், இங்குள்ள ஒவ்வொரு படைப்பும் பூரணத்தைப் போல இனிமையானதாகவும் கருதி, நாம் இனிய செயல்களை செய்ய வேண்டும் என்பதை இறைவன் நமக்கு உணர்த்துகிறார்.

Tags:    

Similar News