கால்பந்து

இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு

Published On 2024-05-16 05:20 GMT   |   Update On 2024-05-16 05:20 GMT
  • சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
  • இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.

புதுடெல்லி:

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு கடந்த 20 ஆண்டுகளாக அவர் பங்களிப்பு அளித்து வந்துள்ளார்.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.

இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.

கால்பந்து வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனக்கூறி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். சுனில் சேத்ரியின் இந்த அறிவிப்பால் இந்திய கால்பந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஜூன் 6-ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுகிறார்.

Tags:    

Similar News