பொது மருத்துவம்
null

ரத்த தானம் செய்வதன் மூலம் ரத்த அழுத்த நோய்களை தடுக்க முடியுமா?

Published On 2024-09-17 04:10 GMT   |   Update On 2024-09-17 08:01 GMT
  • ரத்த தானம் செய்பவர்களுக்கு, புது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி ஆகும்.
  • அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் ரத்த தானம் செய்ய வேண்டும்.

ரத்த தானம், நோய்வாய்ப்பட்ட ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல், ரத்த தானம் செய்தவரின் உடலுக்கும் பலவிதங்களில் நன்மையைத் தருகிறது.

'ஒருவர் தொடர்ந்து ரத்த தானம் செய்து வந்தால், அவருக்கு ரத்தக்கொதிப்பு குறைய வாய்ப்புள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 'மாரடைப்பு' வரும் வாய்ப்பையும் குறைக்கும்' என்று இதய நோய் சிகிச்சை நிபுணர்களின் ஆய்வு கூறுகிறது.


ஒரு வருடத்தில் நான்கைந்து தடவை ரத்த தானம் செய்த நூற்றுக்கணக்கான பேரின் ரத்த அழுத்த அளவை பரிசோதித்து பார்த்தபோது சுமார் 40 சதவீதம் பேருக்கு சற்று அதிகமாகவும், மீதி 60 சதவீதம் பேருக்கு சரியாகவும், சற்று குறைவாகவும் இருந்தது. ஆக மொத்தத்தில் ரத்த தானத்தை பொறுத்தவரை ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லதைத் தான் செய்திருக்கிறது.

உங்களுடைய ரத்தத்திலுள்ள 'ஹீமோகுளோபின்' என்று அழைக்கக்கூடிய இரும்புச்சத்து பொருள் மிக அதிகமாக இருந்தால், நீங்கள் ரத்த தானம் செய்தால் உங்களுடைய ரத்தத்தின் அடர்த்தி குறைந்து ரத்தம் சீராகவும் சுலபமாகவும் உடலெங்கும் ஓடி இதயத்தை சீக்கிரம் சென்றடையும்.


ரத்த அடைப்புக் கட்டி, மாரடைப்பு, ரத்த ஓட்ட குறைபாட்டினால் கால், கைகள் மரத்துப் போதல் போன்றவை ஏற்படாமலிருக்க இது உதவி செய்யும்.

தொடர்ந்து ரத்த தானம் செய்பவர்களுக்கு, புது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி ஆகும். இதய நோய்களினால் வரும் பெரும் பிரச்சினைகளும், பேராபத்துகளும் குறையும்.

முதலில், உயிருக்குப் போராடும் ஒருவருக்கு ரத்த தானம் செய்கிறோம், அவருடைய உயிர் பிழைக்க உதவி செய்கிறோம் என்பதே உங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தையும், பேரானந்தத்தையும், மன நிம்மதியையும் கொடுக்கும். இதுவே நீங்கள் உற்சாகமாகவும் எவ்வித மன இறுக்கமும் இல்லாமல் நிம்மதியுடன் வாழ வழிவகுக்கும்.


அதிக ரத்த அழுத்தம் இல்லாமல் இருக்க தொடர்ந்து ரத்த தானம் செய்தால் மட்டும் போதாது. மற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளையும் பின்பற்ற வேண்டும்.

ஊற்றில் நீரை எடுக்க எடுக்க புதுநீர் ஊறி வந்துகொண்டே இருப்பதுபோல ரத்த தானம் செய்யச்செய்ய ரத்தத்தில் புதிய செல்கள் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கும். தகுதியுள்ள அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் ரத்த தானம் செய்ய வேண்டும்.

Tags:    

Similar News