பொது மருத்துவம்

எல்லோர் வீட்டிலும் இருக்கும்.. காலையில் இதை எடுத்துக்கொண்டால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்

Published On 2024-10-02 14:46 GMT   |   Update On 2024-10-02 14:46 GMT
  • இனிப்புகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
  • காரமான உணவுகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

உடல் ஆரோக்கியத்தை பேண பலரும் பலவிதமான முறைகளை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில், அருகம்புல் சாறு, ஏபிசி ஜூஸ் போன்றவற்றை காலையில் அருந்துவார்கள். இவை பல வகையில் உடல் ஆரோக்கியத்த்திற்கு வழி வகுக்கும். அதே போல், வெறும் வயிற்றில் சில குறிப்பிட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்தாலும் பல நோய்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். அவை குறித்து பார்க்கலாம்...

* சோடாவில் கார்போனேட்டட் அமிலம் அதிகம் இருப்பதால் இவற்றை வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது.

* காரமான உணவுகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

* தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதில் உள்ள ஆக்சாலிக் அமிலமானது இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து வயிற்றில் கற்களை உருவாக்கி விடும்.

* மாத்திரைகளை எப்போதும் வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது.

* இனிப்புகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அவை இன்சுலின் உற்பத்தியை பாதித்து நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.

* வெறும் வயிற்றில் சோடா அல்லது மற்ற இரசாயனம் கலந்த குளிர்பானங்கள் எடுத்துக் கொள்ளும்போது அவை வயிற்றில் இரத்த ஓட்டத்தை குறைக்கின்றன.

* காலையில் வெறும் வயிற்றில் காபி அல்லது டீயை குடித்தால் 'காபின்' ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தை அதிகளவு சுரக்க வைத்து நெஞ்சு எரிச்சல், அஜீரணம், வாயுத்தொல்லை போன்ற வயிற்று உபாதைகள், குமட்டல், இரைப்பை அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே காபி குடிப்பதற்கு முன்பாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது நல்லது.

Tags:    

Similar News