லைஃப்ஸ்டைல் (Health)

சிறுதானிய அடை செய்வது எப்படி

Published On 2016-04-27 05:10 GMT   |   Update On 2016-04-27 05:10 GMT
சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம்.
தேவையான பொருட்கள் :

கம்பு - கால் கிலோ
கேழ்வரகு - கால் கிலோ 
சோளம் - கால் கிலோ
கொள்ளு - கால் கிலோ
பாசிப் பயறு - கால் கிலோ
குதிரைவாலி - கால் கிலோ
சாமை அரிசி - கால் கிலோ
வரகரிசி - கால் கிலோ
முழு கறுப்பு உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்
கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - சிறிதளவு
முருங்கை கீரை - 2 கைப்பிடி

செய்முறை :

* வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
* கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி, முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை அனைத்தையும் காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.  நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும்.
 
* இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

* அரைத்த மாவை உப்பு, முருங்கை கீரை போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அடையாகத் ஊற்றி, அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை தயார்.
 

Similar News