சமையல்

வீட்டிலேயே செய்யலாம்... வடா பாவ்...

Published On 2024-06-24 14:33 GMT   |   Update On 2024-06-24 14:33 GMT
  • ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.

தேவையான பொருட்கள்:

வடா பாவ் பன் - 10

உருளைக்கிழங்கு - 4

மஞ்சள் தூள் - 1 பின்ச்

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு

எலுமிச்சை - 1

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - தேவையான அளவு

கடலை மாவு - 200 கிராம்

தண்ணீர் - தேவையான அளவு

நல்லெண்ணெய் - பொறிக்க

பச்சை மிளகாய் - 10

புதினா சட்னி - தேவையான அளவு

கார சட்னி - தேவையான அளவு

செய்முறை:

• முதலில் உருளைக் கிழங்கை ஒரு குக்கரில் போட்டு நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

• வேகவைத்த உருளைக் கிழங்கை தோல்களை நீக்கி, ஒரு மத்து அல்லது மேஷர் கொண்டு மசித்து எடுத்துக் கொள்ளவும்.

• ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

• பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும்.


• கிளறிய உருளைக்கிழங்கை சிறிது நேரம் ஆற விடவும்.

• ஆறிய கிழங்கை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.

• ஒரு கடாயில் நல்லெண்ணை ஊற்றவும்.

• நன்கு எண்ணெய் காய்ந்தவுடன் உருட்டி வைத்திருந்த உருளைக்கிழங்கை கடலை மாவு கலவையில் சேர்த்து எண்ணெய் சட்டியில் போட்டு பொறித்து எடுத்து கொள்ளவும்.

• அதே எண்ணெயில் பச்சை மிளகாய் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ளவும்.

• பின்னர் வடா பாவ் பன்னை எடுத்து குறுக்கே இரண்டாக வெட்டிக் கொள்ளவும். (முழுமையான வெட்டக்கூடாது)

• வெட்டிய பன்னின் உள்ளே ஒருபக்கம் புதினா சட்னியையும், மறுப்பக்கம் சட்னியை தடவி பொறித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை நடுவில் வைத்து அதனுடன் பொறித்து எடுத்த பச்சை மிளகாய் வைத்து பரிமாறிவும்.

• இதோ வீட்டிலேயே எந்த தீங்கும் இல்லாத வடா பாவ் ரெடி.

Tags:    

Similar News