செய்திகள் (Tamil News)
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 150 தொகுதியை பிடிக்கும்: வாக்களித்தபின் குஷ்பு பேட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 150 தொகுதியை பிடிக்கும் என்று வாக்களித்தபின் குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், நடிகை குஷ்பு மந்தவெளியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார். அவருடன் கணவரும் நடிகருமான சுந்தர்.சியும் வந்து வாக்களித்தார்
ஓட்டு போட்ட பின்னர் குஷ்பு கூறியதாவது:–
காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
மக்கள் இந்த கூட்டணிக்கு ஆதரவாகவே வாக்களித்து வருகிறார்கள். ஆளும் கட்சி பணப்பலத்தை நம்பி நிற்கிறது. ஏராளமாக பணப்பட்டுவாடா செய்திருக்கிறார்கள்.
இதனால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், நடிகை குஷ்பு மந்தவெளியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார். அவருடன் கணவரும் நடிகருமான சுந்தர்.சியும் வந்து வாக்களித்தார்
ஓட்டு போட்ட பின்னர் குஷ்பு கூறியதாவது:–
காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
மக்கள் இந்த கூட்டணிக்கு ஆதரவாகவே வாக்களித்து வருகிறார்கள். ஆளும் கட்சி பணப்பலத்தை நம்பி நிற்கிறது. ஏராளமாக பணப்பட்டுவாடா செய்திருக்கிறார்கள்.
இதனால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.