செய்திகள் (Tamil News)

அதிமுக எம்.எல்.ஏ.க்களை நாளை பிற்பகல் சந்திக்கிறார் ஆளுநர் வித்யாசாகர்

Published On 2017-02-08 16:22 GMT   |   Update On 2017-02-08 19:51 GMT
தமிழகம் வரும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிமுக எம்.எல்.ஏ.க்களை நாளை பிற்பகல் சந்திக்க உள்ளதாக அக்கட்சியின் புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவே தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை மதியம் சென்னை வருகிறார். ஆளுநர் சென்னை வருவதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை வரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை பிற்பகல் அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார்கள்.
அதிமுக பொருளாளரும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் சென்னை விமான நிலையத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பை தமிழகத்தில் உள்ள ஆளுநர் மாளிகை இதுவரை உறுதி செய்யவில்லை.

முன்னதாக, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் டெல்லிக்கு செல்வதாக இருந்தனர். விமான நிலையம் வரை சென்ற அதிமுக எம்.எல்.ஏ-க்களின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆளுநர் வருவது தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

Similar News