செய்திகள் (Tamil News)
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இசைப்புயல்: கனவு நனவானதாக பெருமிதம்
இன்று நேற்று நாளை திரைப்பட இயக்குநர் ரவிக்குமாரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க இருந்த நிலையில் இசையமைப்பளார் ஏ.ஆர் ரகுமான் இணைந்துள்ளார்.
இன்று நேற்று நாளை திரைப்பட இயக்குநர் ரவிக்குமாரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க இருந்த நிலையில் இசையமைப்பளார் ஏ.ஆர் ரகுமான் இணைந்துள்ளார்.
‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ரவிக்குமார், தனது அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் உடன் கைகோர்த்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.
படத்தின் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இந்த புராஜெக்டில் இணைந்துள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தனது பெரிய கனவு ஒன்று ஏ.ஆர் ரகுமானுடன் இணைந்ததன் மூலம் நனவாகியுள்ளதாதாக பெருமிதத்துடன் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.