உள்ளூர் செய்திகள் (District)

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை படத்தில் காணலாம்.

சேலம் வழியாக சென்ற ரெயிலில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2022-12-07 09:30 GMT   |   Update On 2022-12-07 09:30 GMT
  • ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
  • இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

சேலம்:

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஏட்டுக்கள் பாலசுப்பிரமணியன், கண்ணன் ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர்.

அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

அந்த பேக்கில் 5 பண்டல்களில் 10 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News