உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 12 அரசு பள்ளிகள்

Published On 2023-05-09 07:35 GMT   |   Update On 2023-05-09 07:35 GMT
  • பிளஸ்-2 பொதுத்தேர்வில் முடிவுகள் நேற்று வெளியானது.
  • பிளஸ்-2 பொதுத்தேர்வில் 12 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் 215 பள்ளிகளை சேர்ந்த 20,802 மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் எழுதினர். இவர்களில் 19,505 மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

இவற்றில் அரசு பள்ளிகள் , கள்ளர்சீரமைப்புத்துறை பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறைபள்ளி என மொத்தம் 12 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.

அதன்படி மன்னவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி(29), பாப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி(44), பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி(49), கொக்கரக்கால் வலசு அரசு மேல்நிலைப்பள்ளி (39), லந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி (27), கோம்பைப்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி (22), செட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி (20),

கே.புதுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி(65), விலாம்பட்டி அரசு கள்ளர்மேல்நிலைப்பள்ளி (58), சேவுகம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி(28), சென்னமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி(57), பெரும்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி (19) ஆகிய பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

Tags:    

Similar News