உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் ராவ்பகதூர் எச்.பி.ஆரிகவுடரின் 129-வது பிறந்த நாள் விழா

Published On 2022-12-05 09:49 GMT   |   Update On 2022-12-05 09:49 GMT
  • கலெக்டர் அம்ரித் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
  • விழா குழு தலைவர் மஞ்சை.வி.மோகன் ( படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர்) தலைமை தாங்கினார்.

ஊட்டி

ஊட்டி என்.சி.எம்.எஸ். வளாகத்தில் ராவ்பகதூர் எச்.பி.ஆரிகவுடரின் 129-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழா குழு தலைவர் மஞ்சை.வி.மோகன் ( படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர்) தலைமை தாங்கினார்.

ராவ்பகதூர் எச்.பி.ஆரிகவுடர் உருவ சிலைக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத் (அ.தி.மு.க மாவட்ட செயலாளர்) ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், என்.சி.எம்.எஸ். மேலாண்மை இயக்குனர் தமிழ்செல்வன், செயலாளர் தியாகு, முன்னாள் தலைவர் கண்ணபிரான், முன்னாள் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சென்னமல்லன், முன்னாள் தலைவர் கண்ணபிரான், கோத்தகிரி பில்லன், என்சிஎம்ஸ் செந்தில் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக விழா குழு செயலாளர், பெள்ளி பாபு வரவேற்றார். விழா குழு பொருளாளர் கக்கி சண்முகம் நன்றி கூறினார்

Tags:    

Similar News