கோவையில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
- பஸ் நிலையங்களில் இன்று கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- விஷேச தினங்களில் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
கோவை,
நாளை 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. மேலும் அதன் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுைற வருகிறது.
இதன் காரணமாக கோவையில் தங்கி வேலை பார்த்து வரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இவர்கள் கோவையில் இருந்து செல்லும் பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிக்க தயாராகி வருகின்றனர்.
இதனால் பஸ் நிலையங்களில் இன்று கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷேச தினங்களில் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தமிழ்புத்தாண்டையொட்டி இன்று முதல் கோவையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, ராஜபாளையம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 110 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மார்க்கமாக பிற ஊர்களுக்கு செல்ல 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மொத்தமாக கோவையில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மேலும் பயணிகளின் வருகை ஏற்றபடி பஸ்களின்எண்ணிக்கை அதிகரிக்கவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.