உள்ளூர் செய்திகள் (District)
மீன்கடையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
- 3 பேர் மீன் கடையில் மது போதையில் வந்து தகராறு செய்து சதீஷை தாக்கினர்.
- அருண், முனியப்பன் 2 பேரை போலீசார் கைது செய்து கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், கே.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் சதீஷ் (வயது 32). இவர் கன்னண்ட அள்ளி பகுதியில் மீன் கடை நடத்தி வந்தார்.
அப்போது பில்லகொ ட்டாய் கிராமத்தை சேர்ந்த முனியப்பன் (வயது 22), அருண் (22), சசி (33) ஆகிய 3 பேரும் இவரது கடையில் மது போதையில் வந்து தகராறு செய்து சதீஷை தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் அருண், முனியப்பன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.
இதில் தலைமறை வாகியுள்ள சசியை போலீசார் தேடி வருகின்றனர்.