உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது

Published On 2023-02-14 08:26 GMT   |   Update On 2023-02-14 08:26 GMT
  • ஆன்லைன் லாட்டரி விற்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
  • சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

தஞ்சாவூா்:

தஞ்சை வண்டிப்பேட்டை பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு ஆன்லைன் லாட்டரி விற்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் டவுன் போலீஸ் ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்த சசிகுமார் (வயது 22), குமார் (35) என்பதும், சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News