உள்ளூர் செய்திகள்

கோவையில் மூதாட்டி உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2023-03-07 09:05 GMT   |   Update On 2023-03-07 09:05 GMT
  • ஈஸ்வரி சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கினார்.
  • வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை,

கோவை போத்தனூர் அருகே உள்ள நஞ்சுண்டா புரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது65). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர் அரளி விதையை அரைத்து குடித்தார்.

சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக ஈஸ்வரியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சின்னியம்பாளையம் அருகே உள்ள கமலா நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (27) திருமணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஜெயக்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News