உள்ளூர் செய்திகள்

தூக்கு போட்டு 2 பேர் தற்கொலை

Published On 2023-04-29 09:54 GMT   |   Update On 2023-04-29 09:54 GMT
  • கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
  • கடந்த சில நாட்களாக குடும்பத்தில் சகோதரர்களிடையே இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பல்லாளம் கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தன் (வயது 41). கூலி தொழிலாளி. கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனவேதனையில் இருந்த அனுமந்தன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் சூளகிரி அருகே உள்ள சிங்கிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனி வேங்கடப்பா (வயது 68).

கடந்த சில நாட்களாக குடும்பத்தில் அண்ணன் தம்பி இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த முனிவெங்கடப்பா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News