உள்ளூர் செய்திகள் (District)

தூத்துக்குடியில் மூதாட்டி உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2022-12-19 09:10 GMT   |   Update On 2022-12-19 09:10 GMT
  • பார்வதி வீட்டில் இருந்த போது மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • பெருமாள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி கீழசெக்கார குடியை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி பார்வதி (வயது70). ஆதிமூலம் இறந்துவிட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது மகனும் மாயமானார். இதனால் பார்வதி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

தற்கொலை

தன்னை கவனிக்க ஆள் இல்லை என மனவேதனையில் இருந்து வந்த அவர் நேற்று இரவு வீட்டில் இருந்த போது மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மற்றொரு சம்பவம்

முத்தையாபுரத்தை சேர்ந்தவர் தொழிலாளி பெருமாள் (55). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டை நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News