உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

Published On 2022-07-21 09:19 GMT   |   Update On 2022-07-21 09:19 GMT
  • மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் வழிமறித்து சுகந்தி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.
  • டி.எஸ்.பி. தையல் நாயகி தலைமையிலான தனிப்படையினர் போலீசார் விசாரித்ததில் வழிப்பறியில் ஈடுபட்டது.

சேலம்:

சேலம் மாவட்டம் நல்லியாம்புதூரை சேர்ந்தவர் சுகந்தி (வயது 44). இவர் வீட்டில் தையில் தொழில் செய்கிறார்.

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி இரவு 7.45 மணிக்கு ெமாபட்டில் பனமரத்துப்பட்டியில் இருந்து நல்லியாம்புதூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். நல்லியாம்புதூர் பிரிவு அருகே சென்றபோது, எதிரே மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் வழிமறித்து சுகந்தி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

இது பற்றி சேலம் ஊரக டி.எஸ்.பி. தையல் நாயகி தலைமையிலான தனிப்படையினர் போலீசார் விசாரித்ததில் வழிப்பறியில் ஈடுபட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எட்வின்ராஜ் (34), சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கண்டர்குலமாணிக்கம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(28) என தெரியவந்தது. நேற்று அவர்களை கைது செய்த போலீசார், 4 பவுன் தங்க சங்கிலியை மீட்டனர். மேலும் பல்வேறு திருட்டு வழக்கில் இருவருக்கும் தொடர்பு உள்ளதால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

Similar News