செய்திகள் (Tamil News)

கிருஷ்ணகிரியில் வாக்களித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

Published On 2016-05-16 03:54 GMT   |   Update On 2016-05-16 03:54 GMT
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கிருஷ்ணகிரியில் உள்ள தனது தொகுதியில் வாக்களித்தார்.
சென்னை:

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கிருஷ்ணகிரியில் உள்ள தனது தொகுதியில் வாக்களித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் தா.பாண்டியன் சென்னை அண்ணா நகர் தொகுதியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல்வேறு கட்சிகள் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை தருகின்றனர் என்று தெரிவித்தார்.

இதனிடையே அதிமுக எம்.பி-யும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கிருஷ்ணகிரி சிந்தகம்பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை பகுதியில் அதிமுக மஜக வேட்பாளர் தமீமுன் அன்சரி வாக்களித்தார். தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் சென்னை விருகம்பாக்கத்தில் வாக்களித்தார்.

Similar News