செய்திகள் (Tamil News)

ஜெயங்கொண்டம் அருகே 12-ம் வகுப்பு மாணவி மாயம்

Published On 2016-07-07 07:42 GMT   |   Update On 2016-07-07 07:42 GMT
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி திடீரென மாயமானார்
ஜெயங்கொண்டம் :

அரியலூர் மாவட்டம் தாபழூர் அருகேயுள்ள கீழசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் - உஷாராணி தம்பதியினரின் மகள் சந்தியா (வயது17). இவர் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சந்தியா இரவு 7 மணியளவில் வீட்டின் திண்ணையில் படித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவரது தாய் உஷாராணி வந்து பார்த்தபொழுது மகளை காணவில்லை. உடன் பக்கத்து வீடு மற்றும் தெருக்களில் தேடிப்பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபொழுது பீரோவில் இருந்த நான்காயிரம் பணம் மற்றும் சந்தியாவின் ஆடைகள் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து உ‌ஷராணி தா.பழூர் போலீசில் தனது மகளை கண்டுபிடித்துக் கொடுக்ககோரி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிந்து தேடி விசாரித்து வருகின்றார்.

Similar News