செய்திகள் (Tamil News)

பெண் தொழில் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி: ஆந்திர ஆசாமி கைது

Published On 2016-09-17 03:13 GMT   |   Update On 2016-09-17 03:13 GMT
பெண் தொழில் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்த ஆந்திர ஆசாமி கைது செய்யப்பட்டார்.
சென்னை:

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் சுமித்ரா (வயது 46). தொழில் அதிபரான இவர், சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். தாத்தாத்தராய நாகி ரெட்டி என்பவர் கொடுத்த விளம்பரத்தில், கிரானைட் தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களை, தொழில் பார்ட்னராக சேர்த்துக்கொள்வதாக அவர் தெரிவித்து இருந்தார். அண்ணாசாலையில் அலுவலகம் நடத்தி வந்தார். நான் தொழில் பார்ட்னராக விருப்பம் தெரிவித்து, ரூ.18 லட்சம் எனது பங்கு தொகையாக கொடுத்தேன். அவர் அந்த பணத்தை மோசடி செய்து விட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில் அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தாத்தாத்தராய நாகிரெட்டி (27) நேற்று கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அவர், சென்னை சேலையூரில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News