செய்திகள் (Tamil News)

ஆண்டிப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற வாலிபர்

Published On 2016-09-17 13:16 GMT   |   Update On 2016-09-17 13:16 GMT
ஆண்டிப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள போடிதாசம்பட்டியை சேர்ந்த தவமணி மகள் பாண்டீஸ்வரி (வயது15). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அதன்பிறகு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற அவர் திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இது குறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தவமணி புகார் அளித்தார். தனது புகாரில் பாண்டீஸ்வரி விடுமுறையின்போது திருப்பூருக்கு சென்றதாகவும், அங்கு ஒரு வாலிபர் தனது மகளுடன் பழகி வந்ததாகவும் அவர்தான் திருமண ஆசை காட்டி தனது மகளை கடத்தி சென்றிருக்ககூடும் என குறிப்பிட்டுள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும் அவரை கடத்தி சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.

Similar News