அரியலூர் விபத்தில் சிக்கிய மேலும் ஒரு பெண் பலி
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கோரவிபத்தில் 14 பேர் பலியாகினர்.
துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்தது. ஒரே கிராமத்தில் 14 பேர் பலியாகியதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
பலியானவர்களின் உடல்கள் அங்குள்ள மயானங்களில் தகனம் செய்யப்பட்டது. சிலரது உடல்கள் புதைக்கப்பட்டது.
விபத்து தொடர்பாக லாரி டிரைவர் உடையார் பாளையம் தெற்கு பரணம் தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் கார்த்திக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராதா கிருஷ்ணன் மனைவி சாந்தி (வயது45) இன்று காலை மரணமடைந்தார். இதனால் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.