செய்திகள் (Tamil News)

கருப்பு பணத்தை எப்போதும் எதிர்ப்பவர் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் பாண்டியராஜன்

Published On 2016-11-20 10:36 GMT   |   Update On 2016-11-20 10:36 GMT
கருப்பு பணத்தை எப்போதும் எதிர்ப்பவர் முதல்வர் ஜெயலலிதா என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஜி.எஸ்.டி மசோதா தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பாண்டியராஜன் பேசியதாவது:-

ஜி.எஸ்.டி மசோதாவில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி மசோதாவில் தொழில்நுட்ப ரீதியாக பணம் வசூல். ஜி.எஸ்.டி மசோதா தொடர்பான அடுத்த ஆலோசனை கூட்டம் வரும் 25-ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது

கூட்டுறவு வங்கி பிரச்சனைகள் குறித்து அருண் ஜெட்லியிடம் எடுத்துரைக்கப்பட்டது. ஏழை மக்களை பாதிக்காத வகையில் கூட்டுறவு வங்கிகளுக்கு பணத்தை விநியோகிக்க வேண்டும்

ஒரு சில விவகாரங்களில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கருப்பு பணத்தை எப்போதும் எதிர்ப்பவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News