செய்திகள் (Tamil News)
மெரீனாவில் வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
மெரீனாவில் வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் அண்ணாசதுக்கம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னை:
சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் உதயகுமார். செல்போன் கடையில் வேலை செய்து வரும் இவர் நேற்று இரவு நண்பர்களுடன் மெரீனா கடற்கரைக்கு சென்றார்.
அப்போது 5 பேர் கொண்ட கும்பல் உதயகுமாரை மிரட்டி அவரது செல்போனை பறித்தது.
இதையடுத்து உதயகுமார் கூச்சல் போட்டார். பொது மக்கள் திரண்டு வந்து செல்போன் பறித்த கும்பலை மடக்கி பிடித்தனர். இதில் 3 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த லோகேஷ், சீனிவாசன், நந்தகுமார், சக்தி, பப்லு ஆகிய 5 பேர் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவர்களில் சக்தியும், பப்லுவும் தப்பி ஓடி விட்டனர். மற்ற 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். அண்ணாசதுக்கம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் உதயகுமார். செல்போன் கடையில் வேலை செய்து வரும் இவர் நேற்று இரவு நண்பர்களுடன் மெரீனா கடற்கரைக்கு சென்றார்.
அப்போது 5 பேர் கொண்ட கும்பல் உதயகுமாரை மிரட்டி அவரது செல்போனை பறித்தது.
இதையடுத்து உதயகுமார் கூச்சல் போட்டார். பொது மக்கள் திரண்டு வந்து செல்போன் பறித்த கும்பலை மடக்கி பிடித்தனர். இதில் 3 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த லோகேஷ், சீனிவாசன், நந்தகுமார், சக்தி, பப்லு ஆகிய 5 பேர் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவர்களில் சக்தியும், பப்லுவும் தப்பி ஓடி விட்டனர். மற்ற 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். அண்ணாசதுக்கம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.