செய்திகள் (Tamil News)

அரியலூர் அருகே பூச்சி மருந்து கலந்த தண்ணீரை குடித்த 10 வெள்ளாடுகள் பலி

Published On 2017-06-01 14:14 GMT   |   Update On 2017-06-01 14:14 GMT
பூச்சி மருந்து கலந்த தண்ணீரை குடித்த 10 வெள்ளாடுகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகேயுள்ள பட்டகட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பையன் (வயது40), பாண்டியன்(35), கனநாதன்(39), லான்(38). இவர்கள், தங்களது வெள்ளாடுகளை அப்பகுதியில் நேற்று மேய்த்துக்கொண்டிருந்தனர்.

நாளாபக்கமும் மேய்ந்துகொண்டிருந்த வெள்ளாடுகள் தண்ணீரைச் தேடிச் சென்றுள்ளனர். அதே பகுதியில் செல்வராஜ்(50) என்ற விவசாயி தனது நிலத்தில் விளைந்துள்ள பயிர்களின் மேல் தெளிப்பதற்காக தண்ணீரில் பூச்சிமருந்து கலந்து வைத்துள்ளார். இதனை கண்ட வெள்ளாடுகள் தண்ணீர் இருப்பதை கண்டு மடவென குடித்துவிட்டன.அப்போது அங்குவந்த செல்வராஜ் ஆடுகளை விரட்டியுள்ளார். சிறிது தூரம் சென்ற அந்த வெள்ளாடுகள் ஒவ்வொன்றாக சுருண்டு கீழே விழுந்து பலியானது.

உடனே செல்வராஜ் ஆட்டுக்கு சொந்தக்காரர்கள் யார் கூச்சலிட்டு கூப்பிடுள்ளார். அங்கு ஓடிவந்த ஆட்டுக்கு சொந்தமான நான்கு பேரும் தங்களது ஆடுகள் செத்து கிடப்பதை கண்டு பெரும் சோகத்தில் இருந்தனர். இதில் கருப்பையாவுக்கு சொந்தமான 7 ஆடுகளும், பாண்டியன், கனநாதன், லான் ஆகிய மூவரின் தலா ஒரு ஆடுகள் என 10 ஆடுகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News