செய்திகள் (Tamil News)

ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர் ஆற்றில் குதித்து தற்கொலை

Published On 2018-01-15 09:54 GMT   |   Update On 2018-01-15 09:54 GMT
ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாகூர்:

நெய்வேலியை சேர்ந்தவர் துரைசாமி (வயது71), என்.எல்.சி. யில் ஊழியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நெய்வேலியில் வசித்து வருகிறார். ஆனால் துரைசாமி புதுவையில் வசிக்கும் தனது மகன் பாஸ்கரன் வீட்டிலும், மகள் வீட்டிலும் மாறி, மாறி தங்கி இருந்து வந்தார்.

கடந்த சில நாட்களாக கோரிமேடு பிரியதர்சினி நகரில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்த துரைசாமி நேற்று காலை மகளுடன் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.

நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்துக்கு வந்த துரைசாமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ஆற்றில் குதித்தார். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த டிரைவர் இதனை பார்த்து தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து துரைசாமியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் துரைசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து துரைசாமியின் மகன் பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Similar News