செய்திகள்

கோவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2018-05-19 16:51 GMT   |   Update On 2018-05-19 16:51 GMT
கோவை சரவணம்பட்டி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை:

கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் பஸ் நிறுத்தம் அருகே 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சரவணம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். 

அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை பிடித்து அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த சித்து (வயது 25), கரூரை சேர்ந்த ராஜ்குமார் (23) ஆகியோர் என்பதும் அவர்கள் தனியார் கம்பெனியில் வேலை செய்த நேரம் போக மற்ற நேரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News